Friday, April 8, 2016

ஆர்யபட்டா

ர்யபட்டா...!  1975-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி இந்தியா வானில் வெற்றிகரமாக பறக்கவிட்ட செயற்கைக்கோளின் பெயர்.

செயற்கைக்கோளுக்கு இந்திய விஞ்ஞானிகள் இந்த பெயரை தேடிஎடுத்து சூட்டியபோதுதான் பலரும், 'ஆர்யபட்டா என்றால் என்ன?, அல்லது யாருடைய பெயருமா?' என்று வியப்புடன் வினா எழுப்பினார்கள்.

1,550 ஆண்டுகளுக்கு முன்பே கணிதத்துறையிலும், குறிப்பாக வானவியல் துறையிலும் அளப்பரிய சாதனைகளைச் செய்தவர், இந்தியாவில் பிறந்த ஆர்யபட்டா என்பது, அதிகம் பேருக்கு தெரியாமல் இருந்ததுதான் நமது துரதிருஷ்டம்.

ஆனால், ஆர்யபட்டா காலத்துக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பல கணிதமேதைகள் இருந்தார்கள் என்பதுதான் நமது வரலாற்றின் தனிச் சிறப்பு. அந்த நீண்ட வரலாறு பற்றிய சிறு குறிப்பு:-

இந்தியாவின் கணித மேதைகளில் முன்னோடி என்று