வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் சிறார்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பரம்ப் என்ற பெயரிலான புதிய திட்டத்தை தேசிய ஒலிம்பியாட் கழகம் அறிமுகப்படுத்துகிறது.
2 முக்கிய குறிக்கோள்களுடன் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சிறார்கள் எதிர்காலக் கல்வியில் சிறந்த வாய்ப்புகளைப் பெறும் வகையில் அவர்களுக்கு பயிற்சிகள், தேர்வுகள் உள்ளிட்டவற்றை நடத்தி அவர்களை தயார்படுத்துவது ஒன்று. இரண்டாவது, ஆசிரியர்களுக்கு சிறந்த முறையிலான போதனா முறைகளை மேற்கொள்வது குறித்த பயிற்சிகளை அளித்து அவர்களின் திறனை