Friday, April 25, 2014

"த"வரிசைப்பாட்டு


தடதட என்று ஓடி வந்தார்
தாடி வைத்த காதர் பாய்
திகு திகு என்று எரிகிறதாம்
தீப்பிடித்து ஒரு வீடு
துள்ளி அனைவரும் எழுந்தார்கள்
தூக்கம் அனைவரும் தொலைத்தார்கள்
தெருவே அங்கே கூடியது
தேவையான உதவிகள் செய்தது
தைரியம் சிறிதும் குறையாமல்
தொண்ணூறு நிமிடம் போராடினர்
தோகைப்பாடி ஜனங்களெல்லாம்
தௌலத் பேகம் வீட்டாரை
பத்திரமாக காப்பாற்றினர்!

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்