Monday, November 4, 2013

2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ்வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. ""கணினி வழித் தமிழ் மொழி 
பரவிட வகை செய்யும் வகையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள்உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர்கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1.00 இலட்சமும் 1சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு அன்று வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிருது பெற விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 31.12.2013ஆகும்.மேலும் விவரங்களுக்கு http://www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்